எண்ணெய் உற்பத்தியை குறைத்த அரபு நாடுகள் - இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
எண்ணெய் விலை உயர்வால் கடந்த ஆண்டு உலக அளவில் விலைவாசி அதிகரித்தது. எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளில் சாமானிய மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமாகிவிட்டது.