ஓடும் ரயிலில் செல்வந்தரை கொன்றது யார்? அடுத்த பெட்டியில் பயணித்த நடிகை மீது சந்தேகம்?
மதுரையில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் இரவு பத்தரை மணியளவில் திருச்சி சந்திப்பை வந்தடைந்தது. அப்போது அந்தப் பணக்காரர் இறங்கி, அங்கிருந்த உணவகத்தில் ஏதோ வாங்கி சாப்பிட்டதை சிலர் பார்த்திருந்தார்கள். ஆகவே, திருச்சிக்கும் செங்கல்பட்டிற்கும் இடையில்தான் கொலை நடந்தது என்பது உறுதியானது.