விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற பிறகும் சீமானிடம் காவல்துறை விசாரணை ஏன்?
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில், விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அவருக்கு போலீசார் உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவின்படி, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் இன்று நேரில் ஆஜர் ஆனார்.