தமிழ்நாட்டில் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் நாட்டு மர விதைப்பந்துகள் தூவப்படுவது ஏன்?
வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தை புதிய உத்தி ஒன்றின் மூலமாக பசுமையாக்கும் திட்டத்தை இந்திய கடற்படை முன்னெடுத்துள்ளது. ஆம். மரங்களுக்கும் கடற்படைக்கும் சம்பந்தம் இருக்கிறது. கடலில், விண்ணிலும் குண்டுகளை ஏவும் இந்திய கடற்படை, தற்போது விதைகளை தூவும் பணியில் இறங்கியுள்ளது.