இந்தியா-கனடா உறவில் பதற்றம்: இதன்மூலம் சீனா எப்படி பலன் அடையும்?
"கனடா, இந்தியா இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால் மேற்கத்திய முகாமில் பரபரப்பு நிலவுகிறது. ஏனெனில் சீனாவுக்கு எதிரான ஒற்றுமையை அது குறைக்கும். அமெரிக்க தலைமையின் கீழ் பேசப்படும் பிராந்திய பாதுகாப்பில், இந்தியாவின் பலவீனமான நிலையால் சீனாவுக்கு பலன் கிடைக்கும்," என்கிறார் ஜோர்டன் லிம்.