விஜயநகரப் பேரரசின் காலத்தில் இருந்து கொண்டாடப்படும் தசரா
414ஆவது மைசூர் தசரா விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு பல நூற்றாண்டு கால வரலாறு உள்ளது . மகிஷாசுரனை சாமுண்டீஸ்வரி வதம் செய்ததே மைசூர் தசரா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா எப்போது தொடங்கியது என உறுதியாக கூற முடியாது என்றாலும் விஜயநகர பேரரசு காலங்களில் தசரா பெரும் சமூக மத விழாவாக கொண்டாடப்பட்டதற்கான ஆதார்ங்களும் குறிப்புகளும் உள்ளன. தசராவின் போது மைசூர் அரண்மனை லட்சக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இப்போது இந்த விழா கர்நாடகாவின் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.