கிரிக்கெட்டுக்கு மரியாதை அளித்த 'அறிவார்ந்த' சென்னை ரசிகர்கள்
சென்னை ரசிகர்கள் எப்போதுமே கிரிக்கெட்டை மட்டுமே ரசிப்பவர்களாக இருந்துள்ளனர். இந்திய அணி போட்டியிடாவிட்டாலும், நேற்று சென்னையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை ஆயிரக்கணக்கானோர் நேரில் கண்டு களித்துள்ளனர். சென்னை ரசிகர்கள் தந்த உற்சாகத்தைப் பார்த்து ஆப்கானிஸ்தான் அணியினர் போட்டிக்கும் பின் மைதானத்தை சுற்றி நன்றி தெரிவித்தனர்.