ஹமாஸ் பிடியில் பணய கைதிகளாக யாரெல்லாம் இருக்கிறா்ர்கள்?
அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற திடீர் தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் குழுவினரால் 222 பேர் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களை ‘பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்கங்களில்’ ஒளித்து வைத்திருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 20 பேர் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. பிபிசி உறுதி செய்த அல்லது நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்ட பணய கைதிகளின் கதைகளை கூறப்பட்டுள்ளன.