ராஜராஜ சோழனின் பிறந்தநாளை 1000 ஆண்டுகளாக தமிழ்நாடு கொண்டாடுவதன் பின்னணி
ராஜராஜ சோழனின் பிறந்த நாள் சதய திருவிழாவாக ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ராஜராஜசோழனின் ஆட்சிக் காலம் சிறந்த நிர்வாகத்துடன் அமைந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். தஞ்சை பெரிய கோயில் கட்டியது, குடவோலை முறை, மழை நீர் சேமிப்பு அமைப்புகள், வேளாண் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம், வங்கிக் கடன் போன்ற கடன் வழங்கும் முறை என பல்வேறு காரணங்களுக்காக அவரது ஆட்சி நல்லாட்சியாக பார்க்கப்படுகிறது.