மேகமலை காட்டுக்குள் 55 வயது நபரை வனத்துறையினர் சுட்டுக் கொன்றது ஏன்?
வனத்துறையினரால் தேனி மாவட்டத்தை சேர்ந்த 55 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர், மின்வேலிகள் அமைத்து விலங்குகளை வேட்டையாடி வந்தவர் என்றும் அது குறித்து விசாரணை செய்ய முற்பட்ட போது வனத்துறையினரை அவர் தாக்க முயன்றார். எனவே வனத்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தவேண்டியதாயிற்று என்றும் அதில் அவர் பலியானார் என்றும் வனத்துறை தெரிவிக்கிறது. ஆனால் அவர் வயலில் தண்ணீர் பாய்ச்சவே சென்றதாகவும் வனத்துறை உண்மையை கூறவில்லை என்றும் குடும்பத்தார் குற்றம் சாட்டுகிறார். இந்த விவகாரம் தற்போது நீதிபதி முன்னிலையில் விசாரணையில் உள்ளது.