உத்தராகண்ட் மீட்புப் பணி நேரலை: 41 தொழிலாளர்களும் எந்நேரமும் மீட்கப்பட வாய்ப்பு
உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. செங்குத்தாக துளையிடும் பணி முடிவடைந்ததும், தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வர வசதியாக நீண்ட குழாயும் பதிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் எந்நேரமும் வெளியே மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.