ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?
தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இப்போது இந்தத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வரத்துவங்கிய்ருக்கின்றன.