இந்தியாவில் பெண்ணை நிர்வாணமாக இழுத்து செல்லும் கொடூரம் ஏன்? ஆங்கிலேயர் கால சட்டம் அவசியமா?
பெண்களை நிர்வாணமாக்கி அதை ஒரு தண்டனையாகப் பார்த்து மகிழும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிவரும் நிலையில், இது போன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களுடன், ஆண்களை சரியாக வளர்க்க முயல்வதும் தேவை என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.