அமோனியா வாயுக் கசிவால் மூச்சுத் திணறும் எண்ணூர்: தொடர் பாதிப்புகளால் தவிக்கும் மக்கள்
எண்ணூரில் எண்ணெய்க் கழிவு மற்றும் வாயுக் கசிவால் அடுத்தடுத்த விபத்துகள் ஏற்பட்டு அந்தப் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்புகளின் நீட்சி தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்து பாதிப்பதாக எண்ணூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களின் தற்போதைய கள நிலவரம் என்ன? அடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?