பிரதமர் மோதியின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொன்னது?
வரும் 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி கோவை நகரில் வாகனப் பேரணி நடத்த பா.ஜ.க-வினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், கோவை காவல்துறையினர் பாதுகாப்புக் காரணங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருந்தனர். இதனால் பா.ஜ.க-வினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதனை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், பிரதமர் மோதியின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்?