விருதுநகர் தொகுதியில் அடுத்தடுத்து வெற்றிபெற்ற காங்கிரஸுக்கு இந்த முறை என்ன சவால்?
நாடாளுமன்ற தேர்தலில், தென் தமிழகத்தில் பலரும் உற்று நோக்கும் தொகுதியாக விருதுநகர் மாறியிருக்கிறது.விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து காமராஜர், எம்.ஜி.ஆர் என இரண்டு முதலமைச்சர்களை தமிழ்நாடு பெற்றுள்ளது.இம்முறை திரைப்பிரபலங்கள் ராதிகா சரத்குமார் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் விருதுநகரில் போட்டியிடுவதால், சற்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.