இந்தியா-சீனா எல்லை பிரச்னையை தீர்ப்பது குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?
இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா-சீனா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னை குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார். சமீபத்தில் அமெரிக்க பத்திரிகையான 'நியூஸ் வீக்'கிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோதி, எல்லைப் பிரச்னையை சீனாவுடன் பேசி உடனடியாக தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.