சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் என்ன ஆகிறார்கள்?
சென்னை பள்ளிகரணையில் வசித்து வந்த தலித் சமூகத்தை சேர்ந்த பிரவீன், மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், அந்த பெண்ணின் சகோதரரால் கடந்த பிப்ரவரி மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கணவரை இழந்த ஷர்மிளா இரண்டு மாதங்கள் கழித்து தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.