நேத்ரா குமணன்: பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க தயாராகும் சென்னை பெண்ணின் கதை - காணொளி
சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த நேத்ரா குமணன், வரும் ஜூலை மாதம் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள 2024 ஒலிம்பிக்கின் பாய்மர படகுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.