Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Dec (0)
- 2024-May (13)
Narrow by Category
- Tamil (13)
இந்த ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, அடுத்தடுத்து 6 வெற்றிகளைப் பெற்று இப்போது பிளேஆப் சுற்றில் நுழைந்திருக்கிறது. அந்த அணியின் மிகப்பெரிய எழுச்சி எப்படி சாத்தியமானது?
ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 4வது அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆர்சிபி அணி 218 ரன்களை குவித்துள்ள நிலையில், சென்னை அணி பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?
எகிப்தில் உலகப் புகழ்பெற்ற `கிசா’ உட்பட 31 பிரமிடுகள் உள்ளன. இவை 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு கட்டப்பட்டது என்ற மர்மத்துக்கு தற்போது விடை கிடைத்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முதல் தேர்தலை கடும் சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி, உலகின் கவனத்தை ஈர்த்த தேர்தல் ஆணையம் தற்போது குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளின் மையமாக மாறிவிட்டது. தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்திருப்பது ஏன்?
1974 ஆம் ஆண்டின் 138 ஆம் நாள், உள்ளூர் நேரப்படி காலை 8 மணி 08 நிமிடங்கள் 20 வினாடிகளில், இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பே முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி?
சீனாவின் உளவுத்துறை உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாக மேற்குலகம் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்க்கு அமெரிக்கா மற்றும் மேற்குலகம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? உளவு பார்ப்பதில் சீனாவுடன் போட்டியிட முடியாமல் மேற்குலகம் திணறுவது ஏன்?
சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு நபர் அவரது பக்கத்து வீட்டின் பாதாள அறையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். உமர் பின் ஓம்ரான் என்ற அந்த நபர் 1990களில் அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்போது அல்ஜீரியாவில் உள்ள ஜெல்ஃபாவில் (Djelfa) இருந்து காணாமல் போனார். அப்போது அவர் தனது பதின்வயதுகளின் முடிவில் இருந்தார்.
காஸாவுக்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தீர்ப்பில் உண்மையாகக் கூறப்பட்டது என்ன? இதுகுறித்து சர்வதேச நீதிமன்றத்தின் அப்போதைய தலைவர் ஜோன் டோனோகு விளக்கமளித்துள்ளார்.
சூரத்தை சேர்நத மீத்வா சோத்வாடியா என்ற மாணவர் தனது இரு கைகளிலும் விரல்கள் இல்லாதபோதும் தானாகவே தேர்வெழுதி 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வடலூரில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசின் திட்டத்தை எதிர்ப்பது யார்? வடலூரில் என்ன நடக்கிறது?
மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய மும்பை அணிக்கு 2024ஆம் ஆண்டு தொடர் தோல்விகளைச் சந்துத்து கடைசி இடத்திற்குச் சென்றது ஏன்?
மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். உண்மையிலேயே மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா? நீரீவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?
ஈழப்போரில் இறந்துபோன தமிழர்கள் மற்றும் அனைத்து மக்கள் நினைவாகவும் சமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தடை செய்வது ஏன்? முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றால் என்ன?