ஒரே ஓவரில் 30 ரன் - ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டல் சதத்தால் இந்தியா மீண்டும் இமாலய ரன் குவிப்பு
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று கெளஹாதியில் நடந்தது. இதில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட், பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் முகேஷ் குமாருக்குப் பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டிருந்தார்.