Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Dec (0)
- 2024-Feb (325)
Narrow by Category
- Tamil (325)
1974-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி பிறந்த திவ்யபாரதி, இன்று உயிருடன் இருந்திருந்தால் 50 வயது ஆகியிருக்கும். அவரது சினிமா வாழ்க்கை 2-3 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இருந்தபோதிலும், திவ்யாவின் புகழ், திறமை மற்றும் அவரது மகிழ்ச்சியான கதைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன.
லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கேட்டு அங்கிருக்கும் மக்கள் சமீபகாலமாகக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2019-ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக் பகுதி, தன் மாநிலமாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி நடக்காததால், வேலை வாய்ப்பு, அடையாளம் ஆகியவற்றை இழந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
கனடா, பிரிட்டனில் பணிபுரிவோர் தங்களது வாழ்க்கைத் துணையை உடன் அழைத்து செல்வதற்கான விதிகளை அந்நாட்டு அரசுகள் கடுமையாக்கியுள்ளன. அந்நாடுகளின் புதிய 'வாழ்க்கைத் துணை விசா' விதிகள் என்ன?
மேற்கு வங்கத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட அக்பர், சீதா ஆகிய பெயர்களை மாற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சர்ச்சையில் நீதிமன்றம் தலையிட்டது சரியா? சட்ட நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதால் பல்கலைக் கழக நிர்வாகமே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், பல்கலைக் கழகத்துடன் இணைந்த 136 கல்லூரிகளுக்கும் சிக்கலா? சென்னை பல்கலைக் கழகத்திற்கு இந்த நிலை வந்தது ஏன்? அங்கே என்ன நடக்கிறது?
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவின் வங்கப் பகுதியில் 30 லட்சம் பேர் பலியாகக் காரணமான பஞ்சம் வரக் காரணம் என்ன? அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் என்ன செய்தார்?
தமிழ்நாடு அரசின் நாய் வளர்ப்பு கொள்கை வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட 9 ரக நாய்களை இனப்பெருக்கம் செய்ய மட்டும் தடை விதிக்க முன்மொழியப்பட்டிருப்பது ஏன்?
சாதி, மதம் குறித்த விவாதங்கள் தொலைக்காட்சி அரங்குகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் இருந்து தற்போது சமூக ஊடக தளங்களுக்கு மாறிவிட்டன.
25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த 16 அடி நீளமுள்ள நீர்வாழ் ஊர்வன இனத்தின் புதிய, குறிப்பிடத்தக்க, முழுமையான புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஒரு பத்து வயது சிறுவன், சுன்னத் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். என்ன நடந்தது இச்சம்பவத்தில்?
இந்துவாக இருப்பது என்றால் என்ன? இன்றைய காலகட்டத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது? இந்துவாக இருப்பது என்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறதா? பிபிசி தொடரின் முதல் பகுதி.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன ஆராய்ச்சிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 22) மாலத்தீவு சென்றடைந்தது. இந்தக் கப்பல் கடந்த ஒரு மாதமாக இந்தியப் பெருங்கடலில் இருந்தது. இக்கப்பல் உண்மையில் என செய்கிறது?
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது. இந்த ஐபில் டி20 தொடர் நடக்கும்போது மக்களவைத் தேர்தலும் நடக்க இருப்பதால், முதல் 21 போட்டிகளுக்கான தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முல்லைத்தீவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனித புதைகுழி சர்ச்சையாகிவந்தது. தற்போது அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உள்நாட்டுப் போர் நடந்த காலகட்டத்தைச் சார்ந்தது என்று ஒரு அறிக்கை இப்போது தெரிவிக்கிறது.
ஸ்மைல் சர்ஜரி மூலம் ஆந்திர இளைஞர் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அந்த சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது? அதனால் உயிரிழப்பு ஏற்படுமா என்பதும் குறித்து பார்க்கலாம்.
அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்திய மாநிலங்களில் முன்னுதாரணமான மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது எப்படி? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன?
ஒரு பெரிய வானியல் ஆய்வின் மூலமாக, பிரபஞ்சத்தின் நரகம் எது என்பதை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அது எப்படி இருக்கும்?
கணவரை இழந்த, ஆதரவற்றோர் விகிதம் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் அந்தக் கொள்கை கூறுகிறது.
ரோடமைன் பி நச்சுப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்ட பஞ்சுமிட்டாய் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, வேறு எந்த உணவுப்பொருட்களில் இதே நச்சுப்பொருள் காணப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
இரண்டு ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையில் நடைபெற்று வரும் போரினால் ரஷ்யா எப்படி மாறியுள்ளது?
இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக மீட்டு கொண்டுவர ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர். வானத்திலிருந்து ட்ரோன்கள் மூலமாக கண்ணீர் புகை குண்டுகள் மழையாய் பொழிகின்றன. ஒரு வார காலத்திற்கும் அதிகமாக பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் விவசாயிகள், கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொள்வதற்கான எளிய வழியை கண்டுபிடித்துள்ளனர்.
- Video: குடிக்காதே குடிக்காதே மது! பிடிக்காதே பிடிக்காதே புகை! (Category: Video)
- Video: குடிக்காதே குடிக்காதே மது! பிடிக்காதே பிடிக்காதே புகை! (Category: Video)
- புகை பிடிப்பதை நிறுத்தியதும் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் (Category: Tamil)
- கிம் ஜாங் உன்: பொதுவெளியில் புகை பிடிக்கும் அதிபர் - என்ன சிக்கல்? (Category: Tamil)
தருமபுரி மாவட்டத்தில் பெண் பயணி ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பாதுகாப்பற்ற வழித்தடத்தில் இறக்கி விட்ட சம்பவத்தில் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் என்ன நடந்தது?
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாட்டின் 2024-25 நிதிநிலை அறிக்கையை ஒட்டி தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய கடன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வரை வாங்கலாம்? தமிழ்நாடு நிதி நெருக்கடியில் உள்ளதா?
சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான கணக்குகள் மற்றும் பதிவுகளை அரசு உதகரவுகள் காரணமாக நீக்கியதை ஒப்புக்கொண்டது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் ஒரு பாலம் இதுவரை கட்டப்படாதது ஏன், அதற்கான காரணம் என்ன?
கஜகஸ்தானில் நடந்த கிணறு விபத்தில் 1,27,000 டன் மீத்தேன் வாயு வெளியேறியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரை பற்றி தனது வழிகாட்டியில் குறிப்பிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அதில் கூறப்பட்ட முக்கியமான அம்சங்கள் என்னென்ன?
இராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்தி, இலங்கையில் சிறை வைத்ததாக கூறப்படும் அசோக வனம் இன்று எப்படி இருக்கிறது?