Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Dec (47829)
Narrow by Category
- Tamil (47829)
இன்று ஆமதாபாத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் மீட்பர் விராட் கோலி, ரோஜித் ஷர்மாவை பாகிஸ்தானால் சமாளிக்க முடியுமா? பாகிஸ்தானின் பந்துவீச்சு தாக்குதலை இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
காசாவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பாலத்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸின் உயர்மட்ட நபர்கள் பலர் ஊடகங்களின் முன் இதுவரை தோன்றியதே இல்லை. பல நேரங்களில் அவர்கள் இஸ்ரேலின் படுகொலை முயற்சிகளைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைமறைவாகவே கழித்தனர்.நாம் மிகவும் முக்கியமான தற்போதைய ஹமாஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் இஸ் அல்-தின் அன்-குஸ்ஸாமின் பல்வேறு படைப்பிரிவுகளின் ராண...
சென்னை சேப்பாக்கம் மைாதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியை வீழ்த்தியிருந்தாலும், நியூசிலாந்து அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. 246 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றத...
- மும்பையின் ஆறுதல் வெற்றியால் சென்னைக்குக் கிடைத்த நன்மை (Category: Tamil)
- ரோகித் சர்மாவை எல்லைக் கோட்டில் நிற்கவைத்த ஹர்திக், தவறு செய்தது எங்கே? (Category: Tamil)
- மும்பை அணியின் தோல்விக்கு யார் காரணம்? ஹர்திக் கூறியது என்ன? (Category: Tamil)
இஸ்ரேல் அரசு ஒரு மொபைல் செயலியை இயக்குவதாகவும், அதில் அவ்வப்போது நாட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் பகிரப்படுவதாகவும், ராக்கெட் வரும்போது செயலியில் சைரன் ஒலிக்கும் என்றும் சொல்கிறார் இஸ்ரேலில் இருந்து இந்தியா திரும்பிய திவாகர். இஸ்ரேலில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா? அங்கு அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
செப்டம்பர் 15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினத்திலிருந்து சைமன் பாஸ்டின் என்பவருக்குச் சொந்தமான இரண்டு ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகளில் ஒரு படகில் 16 பேர் வீதம் 32 பேர் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் தற்போது பிரிட்டன் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? அவர்களின் நிலை என்ன?
குண்டூரில் வசிக்கும் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை யூதர்கள் என்று கூறிக் கொள்கின்றனர். இவர்கள் தங்களை பெனே எப்ரைம் பழங்குடியினர் என்று அழைக்கின்றனர். இவர்கள் இஸ்ரேலில் இருந்து இங்கு வந்து குடியேறியதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஸ்ரீராம் முரளி கூகுள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு புகைப்படத்துறையில் சாதித்தது எப்படி?
100 அடி ஆழத்தில் 500 கி.மீ பரப்பளவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் கட்டப்பட்டச் சுரங்கங்களில் தான் அக்குழுவின் முக்கியமான கட்டுப்பாட்டு அறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள் செல்லும் சுரங்கங்கள் மூலம் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் பிராந்தியங்கள்மீது தாக்குதல் நடத்தவும் செய்கிறது என்றும் செய்திகள் சொல்கின்றன. இந்தச் சுரங்கங்களைக் குறிவைத்துத் தாக்கப்போவதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆன...
வடக்கு காசா பகுதியில் வசிக்கும் மக்களை ‘பாதுகாப்புப் காரணங்களுக்காக’ அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசா நகரத்தில் வசிப்பவர்களை தெற்கு பகுதிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது. ஐ.நா.வின் தகவலின்படி, வாடி காசா எனப்படும் பகுதிக்கு வடக்கே இருக்கும் 11 லட்சம் மக்கள் ஒரே நாளில் தெற்கு நோக்கி இடம் பெயர வேண்டிவரும். அடுத்து என்ன நடக்கப்போகிறது?
இந்தியாவில் உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றிற்குச் சொந்தமான ஒரு விரிவான கல்லறைத் தளத்தைக் குஜராத்தில் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பகால இந்தியர்கள் எவ்வாறு வாழ்ந்து இறந்தார்கள் என்பதற்கான தகவல்களை இந்தக் கல்லறைகள் நமக்குத் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு, இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி இதுபோன்ற மோசமான ஆட்டத்தை எந்தத் தொடரிலும் வெளிப்படுத்தியதில்லை என்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. ஆஸ்திரேலியா எந்த இடத்தில் சறுக்கியது?
சுமார் 22 லட்சம் மக்கள் வசிக்கும் காசா பகுதிக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களை இஸ்ரேல் முற்றிலுமாகத் துண்டித்துள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள், பள்ளிகள், மற்றும் பிற அத்தியாவசியச் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அங்குள்ள மக்களின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
தமிழ் பாரம்பரியத்தின் பெருமைகளில் ஒன்று காஞ்சிபுரம் பட்டுபுடவைகள். கடந்த 24 வருடங்களாக , தான் சேகரித்த சுமார் 40 முதல் 100 வருடங்கள் வரை பழமையான பட்டுப்புடவைகளை பொதுமக்களுக்கு காட்சிபடுத்தியுள்ளார் சென்னையை சேர்ந்த சந்தோஷ் பரேக்.
சமீபகாலங்களில் மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தத் தடமுமின்றி பணம் திருடப்படும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.ஓடிபி இல்லாமல் பணத்தை எடுக்க முடியுமா? வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருட்டுபோகாமல் தவிர்ப்பது எப்படி? என வங்கியின் முன்னாள் மேலாளர்கள் மற்றும் காவல்துறையில் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றியவர்களிடம் பிபிசி பேசியது.
இந்திய பயணத்துக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணியிடம் தொடர்ந்து 3 தோல்விகளை ஆஸ்திரேலியா சந்தித்தது. 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களுக்கு அதிகமான வேறுபாட்டில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது.
நாங்கள் சார்பு எடுப்பதில்லை. “தீய” அல்லது “கோழை” போன்ற வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை. பயங்கரவாதிகள் என்று நாங்கள் பேசுவதில்லை. நாங்கள் மட்டுமில்லை, உலகில் மிகவும் மதிக்கப்படும் சில செய்தி நிறுவனங்களும் இதே கொள்கையைக் கொண்டுள்ளன.
- ஹமாஸ் ஆயுதக்குழுவை பயங்கரவாதிகள் என பிபிசி குறிப்பிடாதது ஏன்? (Category: Tamil)
- 'குழந்தை வேண்டாம்' எனும் இளம் தம்பதிகள் தன்னலம் பேணும் சுயநலவாதிகளா? (Category: Tamil)
எல்லையை ஊடுருவிச் செல்லும் நோக்கத்தில், ஹமாஸ் ஆயுதக்குழுவின் ராணுவப் பிரிவினர் வான்வெளி தாக்குதல் நடத்த ராணுவ பாராசூட்டுகளை தொடர்ச்சியாக பயன்படுத்தினர். இது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய உத்தியை நினைவுபடுத்தியது.இரண்டாம் உலகப் போரின்போதும் ஜெர்மனி மற்றும் அதன் நேச நாடுகள் முதலில் பாராசூட் மூலம் தாக்குதல் நடத்தும் பிரிவினரைத்தான் முதலில் சண்டையிட அனுப்பினார்கள்.
பூமியில் இருந்து 200 கோடி கி.மீ தொலைவிலிருக்கும் ‘பென்னு’ என்னும் சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, நாசாவின் ஒசைரிஸ் ரெகஸ் விண்கலம் சென்ற மாதம் பூமிக்குக் கொண்டு வந்தது. இப்போது அந்த மண்ணில் என்ன இருந்தது என்பதை நாசா வெளியிட்டிருக்கிறது.
சென்னை அருகே இன்று அதிகாலையில் இரண்டு இடங்களில் நடந்த காவல்துறை மோதல்களில் ரவுடிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஆனால், காவல்துறை அவர்களைப் பிடித்து வந்து கொன்றதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக வரலாற்றில் மட்டுமல்லாது மராட்டியர், ஆங்கிலேயர், பிரெஞ்சு அரசியல் வரலாறுகளிலும் இடம் பெற்றிருக்கும் பன்னாட்டு வரலாற்றுச் சின்னம்தான் தமிழ்நாட்டின் ரஞ்சன்குடி கோட்டை. இதன் வரலாறு தெரியுமா?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஊடகவியலாளர் கே.திலிப் அமுதனினால் ஜனாதிபதி செயலகத்திடம் தகவலறியும் சட்டத்தின் ஊடாக கோரிய போதே ஜனாதிபதி செயலகம் இந்த மறுப்பு அறிக்கையை அனுப்பியுள்ளது.
- ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி.. (Category: Tamil)
அயர்ன் டோம் எனப்படும் பாதுகாப்பு கவசத்தை மீறி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது பல்லாயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவிய சம்பவம் அந்த பாதுகாப்பு அமைப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு முன்பும் சில முறை அந்த அமைப்பினால் போதுமான பாதுகாப்பு உறுதிசெய்யப்படாத நிலையிலும், பல முறை திறம்படச் செயல்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. அதே நேரம் தற்போது ஹமாஸ் அமைப்பிடம் உள்ள ஆயுதங்கள் மிகவும் வலுவானவை என்...
இன்று, ‘இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ என்று பல வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய், மிகக் கொடூரமான பழமைவாதப் பழக்கமான ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறுதலை எதிர்த்தவர், பல சமூகச் சீர்திருத்தங்களுக்காகப் போராடியவர். ஆனால் அவரது கல்லறை கூட இந்தியாவில் இல்லை - ஏன் தெரியுமா?
தமிழ்நாடு நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேயன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதற்காக 3 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் வந்து நிற்க வசதியாக துறைமுகத்தின் கரை பகுதி ஆழப்படுத்தப்பட்டது, மேலும் நாகப்பட்டினம் துறைமுகம் நவீனம் செய்யப்பட்டது.
நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளின் விடுதலைக்குக் குரல் கொடுத்திருப்பதன் மூலம், பா.ஜ.க. கூட்டணியால் தான் இழந்ததாகக் கருதும் இஸ்லாமியர்களின் வாக்குகளை அ.தி.மு.க. ஈர்க்க முயல்கிறது. இது பலனளிக்குமா?
இந்தியா-ஆஃப்கானிஸ்தான் இடையே நேற்று (அக்ட்போபர் 11) நடந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தைக் காணும் ஆவலில் டெல்லி ரசிகர்கள் குழுமியிருந்தனர். ஆனால், ரோஹித் சர்மா அபாரமான தனது ஆட்டத்தின்மூலம் அவர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். ஆனால் அடுத்துவரும் 5 வாரங்களும் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்குச் சவாலகத்தான் இருக்கும்.
உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சாதனைமேல் சாதனை படைத்துள்ளார். ஐ.பி.எல். தொடரின் போது எதிரும் புதிருமாக மாறிப் போன கோலியும் ஆப்கன் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கும் களத்தில் சந்தித்த போது என்ன நடந்தது?
உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சாதனைமேல் சாதனை படைத்துள்ளார். அவை என்ன தெரியுமா?
இந்த ஆண்டுக்கான சிறந்த வன உயிர் புகைப்படக் கலைஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் விருது வென்றுள்ளார். அவர் யார்? எதனை படம் பிடித்தார்?
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் பாலத்தீனம் என்ற கனவை தகர்த்துவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், ஹமாஸின் செயலை இலங்கையில் தமிழர் உரிமை போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடுவது சரியா?
Popular Topics
- International Monetary Fund (1)
- Bank reserves (2)
- Russia (1)
- Ukraine (3)
- Hiru Tv (1)
- ITN News (5)
- Shakthi Tv (1)
- Derana Dream Star (3)
- BBC (24)